ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

English Meaning:
Devotion To Sakti

"She, who is called Umaiyammai, possesses the greatness of being the epitome of bliss. She severed my cycle of birth, granted me liberation, and took possession of me; she is renowned and revered. She claims as her own the sacred shrine of Thiruvavaduthurai, where Lord Shiva resides. I now reside in the shade of her divine feet."
Tamil Meaning:
`உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.
Special Remark:
`தேவியாவாள் சிவனது சத்தியே` என்பது பற்றி இவ்வாறு அருளிச்செய்தார், ``பேரின்பமான பிரமக்கிழத்தி`` என்றார் திருவுந்தியாரிலும் (பா.34). இதனால், தாம் திருவாவடுதுறையில் நிரதி சயானந்தம் உற்று இருந்த நிலையைக் கூறினார் என்க சீர் - செல்வம். `சீராக` என ஆக்கம் வருவிக்க. ஆவடுதுறை அம்மை ஆவாய் நின்று பூசித்த தலமாதல் அறிக,