
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
English Meaning:
Devotion To Sakti"She, who is called Umaiyammai, possesses the greatness of being the epitome of bliss. She severed my cycle of birth, granted me liberation, and took possession of me; she is renowned and revered. She claims as her own the sacred shrine of Thiruvavaduthurai, where Lord Shiva resides. I now reside in the shade of her divine feet."
Tamil Meaning:
`உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.Special Remark:
`தேவியாவாள் சிவனது சத்தியே` என்பது பற்றி இவ்வாறு அருளிச்செய்தார், ``பேரின்பமான பிரமக்கிழத்தி`` என்றார் திருவுந்தியாரிலும் (பா.34). இதனால், தாம் திருவாவடுதுறையில் நிரதி சயானந்தம் உற்று இருந்த நிலையைக் கூறினார் என்க சீர் - செல்வம். `சீராக` என ஆக்கம் வருவிக்க. ஆவடுதுறை அம்மை ஆவாய் நின்று பூசித்த தலமாதல் அறிக,Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage