ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
    தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
    உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
    கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 
  • 10. சிவயோக மாவது சித்தசித் தென்று
    தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
    அவயோகஞ் சாரா தவன்பதி போக
    நவயோகம் நந்தி நமக்களித் தானே. 
  • 11. அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
    அளித்தான் அமரர் அறியா உலகம்
    அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
    அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே. 
  • 12. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
    அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
    ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
    தெளியும் அவரே சிவசித்தர் தாமே. 
  • 13. சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
    சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
    நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
    முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 
  • 14. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
    ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
    செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
    தப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 
  • 15. இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
    இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
    இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
    கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 
  • 16. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
    சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
    சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
    சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 
  • 17. தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 
  • 18. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
    அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
    ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
    செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 
  • 19. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
    மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
    ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
    பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
  • 2. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
    களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
    களிம்பணு காத கதிரொளி காட்டிப்
    பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 
  • 20. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
    பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
    பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
    பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
  • 21. பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
    அருமை எளிமை அறிந்தறி வாரார்
    ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
    இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
  • 22. புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
    திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
    உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
    கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
  • 23. சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
    சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
    சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
    அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 
  • 24. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
    உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
    அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
    செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
  • 25. அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
    கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
    கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
    திடம்பெற நின்றான் திருவடி தானே. 
  • 26. திருவடி யேசிவ மாவது தேரில்
    திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
    திருவடி யேசெல் கதியது செப்பில்
    திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 
  • 27. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 
  • 28. தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
    தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
    தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
    தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 
  • 29. சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
    சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
    வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
    புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 
  • 3. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போற்பசு பாசம் அனாதி
    பதியினைச் சென்றணு காபசு பாசம்
    பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. 
  • 30. போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
    போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
    நாதன் நடத்தால் நயனங் களிகூர
    வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
  • 4. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
    கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
    தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
    தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. 
  • 5. சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
    சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
    சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
    ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 
  • 6. மலங்களைந் தாமென மாற்றி அருளித்
    தலங்களைந் தான்நற் சதாசிவ மான
    புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
    நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 
  • 7. அறிவைம் புலனுட னேநான் றதாகி
    நெறியறி யாதுற்ற நீராழம் போல
    அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
    குறியறி விப்பான் குருபரனாமே.
  • 8. ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
    தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
    தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
    தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 
  • 9. வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
    சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
    ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
    செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.