ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 

English Meaning:
Fill Thy Thoughts With Nandi
All I see is Nandi`s Holy feet twain,
All I think is Nandi`s Holy Form divine,
All I chant is Nandi`s Name, I trow,
In all my thoughts Nandi`s golden Words and wise.
Tamil Meaning:
நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிருவுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.
Special Remark:
`ஆதலின் பிறரும் தம் ஆசிரியரிடத்து நிற்க` என்பது குறிப்பெச்சம். செம்மை - திரிபின்மை; அதனை உடையது அருள் என்க. `தாளிணை, மேனி, நாமம்` என்பவற்றில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. திருவை நாமத்திற்கும் கூட்டுக. `வந்தித்தல்` என்பது இங்கு வழுத்துதலாகிய வழிபாட்டின்மேல் நின்றது.