ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

English Meaning:
Thus They Reached Heaven
Who, in their minds, kept our Nandi`s Holy Name,
Nandi, Wisdom`s Lord, — they holy became;
As the Lord danced, they beheld Him with eyes enthralled,
While the Vedas sang in praise,
Reached Heaven`s sacred shores.
Tamil Meaning:
உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.
Special Remark:
``புண்ணியராயினார்`` என்புழித் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோரது நிலை குறிக்கப்பட்டது. இதனால், `இப்பயனைப் பெறவேண்டின், பிறரும் அருளுருவான தம் ஆசிரியரை நினைக` என்பது குறிப்பெச்சமாய் நிற்றல் அறிக.