ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 

English Meaning:
Siddhas Ascend the Thirty-Six Tattvas
Siddhas they that Siva`s world here visioned;
Nada and Nadanta deep in them realized,
The Eternal, the Pure, reposing in Bliss unalloyed, –
Thirty and Six the steps to Liberation leading.
Tamil Meaning:
சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.
Special Remark:
கருவிகள் முப்பத்தாறாவன சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம்.
அவற்றுள் சிவ தத்துவம் ஐந்தாவன, `சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுரம், சுத்த வித்தை` என்பன. வித்தியா தத்துவம் ஏழாவன, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என்பன. ஆன்ம தத்துவம் இருபத்து நான்காவன, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்னும் அந்தக் கரணங்கள் நான்கும், `செவி, தோல், கண், நாக்கு, மூக்கு` என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், `சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்` என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும், `ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி` என்னும் மாபூதங்கள் ஐந்துமாம். இவை இங்கு இவ்வாறு தோற்ற முறை பற்றிக் கூறப்பட்டன. இவற்றை எல்லாம் நாயனார் பின்னர் விளக்குவார்.
கருவிகள் முப்பத்தாறனுள்ளும் ஆன்மா கட்டுண்டு தன்னியல்பை அறியாது அவையே தானாக மயங்கி நிற்கும். அந்நிலை முழுவதும் கழிதலே முத்தி அல்லது விடுதலையாகலின், ``தம் முத்தி முப்பத்தாறே`` என்றார். முப்பத்தாறே என்றதன்பின் நீக்கப் பொருளில் வந்த ஐந்தாம் உருபும், முற்றும்மையும் தொகுத்தலாயின. மேற்காட்டிய முப்பத்தாறனுள் சிவ தத்துவம் ஐந்தும் சுத்த மாயையின் காரியம் எனவும், வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையின் காரியம் எனவும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் பிரகிருதி மாயையின் காரியம் எனவும் உணர்க. இதனால் தத்துவங்களே மாயாமலமாதல் அறியப்படும்.
தத்துவங்கள் முப்பத்தாறின் கூறாகிய தாத்துவிகங்கள் அறுபதனுள் நால்வகை வாக்குகள் உயிர்க்குப் பரம பந்தம் (பெருங் கட்டு) ஆதலின், அவற்றினின்றும் நீங்குதலை முன்னர்க் கூறினார்.
இதனால், குருவருளால் பெறும், `பாசநீக்கம், (சிவப்பேறு)` என்னும் பயன்கள் இரண்டனுள் பாச நீக்கத்தினது இயல்பு வகுத் துரைக்கப்பட்டது.
சிவனைப் பெற்றவர் நித்தர், நிமலர், நிராமயர், நீள் பரமுத்தர் ஆதலை, ``நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளும், - துன்பமில்லை`` (தி.6 ப.98 பா.1) என்பன முதலிய அருட்டிரு மொழிகளான் அறிக.