ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
    ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
    பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
    சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
  • 10. வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
    வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
    வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
    மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.
  • 11. கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
    கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
    கருதத்து வித்தாய்க் காரண காரியம்
    கருத்துறு மாறிவை கற்பனை தானே.
  • 12. ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
    அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
    ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
    அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.
  • 13. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
    துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
    முற்று மதியத் தமுதை முறைமுறைச்
    செற்றுண் பவரே சிவயோகி யாரே.
  • 14. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
    போகியும் ஞான புரந்தர னாவோனும்
    மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
    ஆகிய விந்து அழியாத அண்ணலே.
  • 15. அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
    மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
    கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
    உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.
  • 16. அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
    பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
    அறிவாய் நனவில் அதீதம் புரியச்
    செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.
  • 17. மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
    காதல தாகிய காமம் கழிந்திடும்
    சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
    சோதியி னுள்ளே துரிசறும் காலமே.
  • 18. காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
    காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
    காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
    காலின்கண் வந்த கலப்பறி யாரே.
  • 19. கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
    நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
    கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
    விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.
  • 2. தானே அருளால் சிவயோகம் தங்காது
    தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
    தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
    ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.
  • 20. மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
    கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
    பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
    மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.
  • 21. விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
    அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும்
    நந்திய நாசமும் நாசத்தால் பேதமும்
    தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.
  • 22. விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
    நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
    அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
    சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.
  • 23. அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள
    அமுதப் புனலோடி அங்கியின் மாள
    அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி
    அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.
  • 24. யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
    ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
    போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
    மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.
  • 25. மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
    காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
    மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
    காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.
  • 26. சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
    ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
    நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு)
    ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.
  • 27. விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
    அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
    சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
    விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.
  • 28. வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
    வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
    வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
    வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.
  • 29. அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
    மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
    மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
    வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.
  • 3. மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
    ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
    ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
    ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.
  • 30. அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
    தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
    சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
    அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.
  • 31. நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
    ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
    சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
    ஒன்ற உரைக்க உபதேசந் தானே.
  • 32. தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
    வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
    மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
    தானே சிவகதித் தன்மையு மாமே.
  • 33. விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
    வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
    அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
    விந்து அடங்க விளையும் சிவோகமே.
  • 34. வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
    நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
    பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
    அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.
  • 35. விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
    சந்திர னோடே தலைப்படு மாயிடில்
    அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
    அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

    மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
    இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
    மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
    கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.
  • 36. சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
    ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
    மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
    அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.
  • 37. உரவடி மேதினி உந்தியில் அப்பாம்
    விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி
    கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம்
    விரவிய கந்தர மேல்வெளி யாமே.
  • 4. ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
    வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
    ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
    ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.
  • 5. செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
    எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
    நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
    செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.
  • 6. விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
    நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
    படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
    கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.
  • 7. கொண்ட குணனே நலனேநற் கோமளம்
    பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே
    மிண்டு தனமே மிடைய விடும்போதில்
    கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.
  • 8. விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
    தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
    கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
    பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.
  • 9. பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
    வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
    சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
    மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.