ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.

English Meaning:
When Bindu Merges Ambrosia Wells

When Bindu and Nada uniting in one
Enter the Sphere of Moon within,
The heavenly ambrosia wells and flows;
The Mantra (Aum) that arises there
Is the sacrificial offering of Lord Supreme.
Merge Mind in Bindu, Away From Lust

When the Mind in the Bindu merges,
Then the Mind, the ears and all organs besides
Will together rise the Divine Goal to seek;
But when thought and sound and words
That in the Mind arise
Seek lust,
As fluid thick it transformed be.
Tamil Meaning:
மேல், ``மேலாம் நிலத்தெழும் விந்துவும்`` என்னும் மந்திரத்திலும், ``விந்துவின் வீசத்தை`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டபடி விந்துவும், நாதமும் ஒன்றாகிச் சந்திர மண்டலத்தை அடைந்த பொழுது அங்கு நின்றும் அமுதம் ஒழுகும் காலத்தில் அதனுடன் கலக்கத்தக்க அவிசு `நின்ற சிகாரம்` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட பிரணவ மந்திரமேயாகும்.
Special Remark:
என்றது, `பிரணவ கலைகளை அவ்வவற்றிற்கு உரிய அதிதேவர்கள் ஏற்ற மகிழ்ந்து, அவற்றின் வலியை அடக்குவர்` என்றபடி. மேற்குறிக்கப்பட்ட மந்திரங்களில் சொல்லியவற்றை மீட்டும் அனுவதித்தது வாக்குச் சயமாகிய விந்து சயம் இவ்வாற்றால் உளதாம் என்பதை உணர்த்துதற் பொருட்டு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், ``விந்துவுள் நாதம் விளைய விளைந்தது` என்னும் மந்திரத்துள் கூறப்பட்ட அவ்விந்து சயம் அமையுமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் இம்மந்திரத்தை அடுத்துக் காணப்படும், ``மனத்தொடு சத்து`` என்னும் பாடல் அதனை அடுத்து வரும் மந்திரத் திற்கு முன்னோடி போன்றுள்ளது. ஆயினும் பொருளற்றதாய் உள்ளது. அதனால் அதனை, `நாயனார் வாக்கு` எனக் கொள்ளுதற்கில்லை.