ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

English Meaning:
In Yoga Way Bindu is not Released

Two bodies in union may unite,
Yet if he emits not Bindu
That union is Yoga way;
That Bhoga is Siva Bhoga;
That the true Bhoga
Where the Yogi emits not
To quell the witless woman`s passion.
Tamil Meaning:
மாதும், ஆடவனும் ஒருங்கு கூடி, இருவர் உடலும் `ஓர் உடலே` எனும்படி இறுகப் புல்லிய விடத்தும் ஆடவனுக்கு அப்புல்லுதல் காரணமாக வெளிப்படுதற்குரிய விந்து வெளிப்படா திருக்கப் பெறுதலே உண்மை யோகமாகும். ஆயினும் அவ்விடத்து இன்ப நுகர்ச்சி இல்லா தொழியாது; உள்ளதேயாகும். அவ்வின்ப நுகர்ச்சி உடலின்ப நுகர்ச்சியாகாது சிவ இன்ப நுகர்ச்சியாகவே அமையும். அதுவே இன்ப நுகர்ச்சியை உடையவனுக்குத் தீங்கினை விளையாது, நன்மையையே விளைக்கும் இன்ப நுகர்ச்சியாம். இந்நுகர்ச்சியைப் பெறும் வகையில் மாதரைப் புணர அறியாதார் புணர்ச்சிக் காலத்தில் அவரை உடல் இன்ப மயக்கமின்றிப் புணர மாட்டார்.
Special Remark:
`அம்மயக்கத்தில் மூழ்கிப் புணர்ந்து கெடுவர்` என்பதாம். `புணர்ந்து ... ... கலந்தாலும் அவ்விந்து ஒழியா வகை யோகம்` எனக் கூட்டியுரைக்க. `போகிக்கு` என நான்கண் உருபு விரிக்க. ``நற்போகமாம்`` என்னும் பயனிலைக்கு, `அதுவே` என்னும் எழுவாய் வருவிக்க. தீங்காவது, போகம் வினைப்போகமாய், மேலும் வினையைப் பெருக்குதல். நன்மையாவது இன்பப்பேற்றைப் பலவாகத் தருகின்ற திருவருளை நினைத்தலால் அதனிடத்து மேலும், மேலும் அன்பு மீதூர்தல்.
``மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை`` எனவும், ``நொய்யேனைப் பொருட்படுத்துச் - சங்கிலியோடு எனைப்புணர்த்த தத்துவனை`` (திருமுறை - 7. 51-10, 11. )எனவும், ``மான் திகழும் சங்கிலியைத் தந்து வருபயன்களெலாம் - தோன்ற அருள் செய்தளித்தாய்`` l எனவும், ``பண்மயத்த மொழிப் பரவே சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே`` 3 எனவும் நினைந்து, நினைந்து உருகியவாறும்,
``ஓர்ந்தனன், ஓர்ந்தனன் உள்ளத் துள்ளே உள்ள ஒண்பொருள்;
சேர்ந்தனன், சேர்ந்தனன்; சென்று திருவெற்றி யூர்புக்குச்
சார்ந்தனன், சார்ந்தனன் சங்கிலி மென்தோள்; தடமுலை
ஆர்ந்தனன்; ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே`` 8
என அருளிச்செய்தவாறும் அறிக. ``மோகங் கெட`` எனப் பொதுப்பட அருளினமையால் இவ் யோகம் வல்லார் தம்மால் கூடப்பெறும் மகளிரையும் மோகம் இலராகச் செய்வர் என்பதும் பெறப்படும். விந்து ஒழியா வகை புணரும் யோகம் வச்சிர `குலியோகம�%8