
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.
English Meaning:
In Yoga Bindu is Divinely AssimilatedIn ignorance the folks waste it daily,
And destroyed by senses, in pain weep;
If in wisdom, they conscious perform Yoga supreme,
The Bindu disappears, divinely assimilated.
Tamil Meaning:
உலக மாந்தரது விந்துக்கள் அவரது அறியாமை யாலேதான் வீழ்ந் தொழிகின்றன ஆதலால், அவ்வீழ்ச்சிக்கண் நாள்தோறும் அவர்ஐம்பொறி வழியில் அகப்பட்டுத்துயர் உறு கின்றனர். ஆகையால், பெரியோர் அறிவுடையராய்ச் சாக்கிரத்தில் தானே அதீத நிலையை அடைந்திருக்க, பிண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுக்கிலமேயன்றி, அண்டத்திற்கு முதலாயுள்ள விந்து வாகிய சுத்த மாயையும் ஒரு சேர அவர்க்கு அடங்கித் தம்மியல்பு கெட்டு நிற்கும்.Special Remark:
அறிவாவது, இங்கு விந்து சயம் பெறும் முறையை அறிதல். அதீதமாவது, சித்தத்தை வேறிடத்தில் வையாது, சிவன்பாலே வைத்திருத்தல். அது ஞானியர்க்கு இயல்பிலும், யோகியர்க்கு யோகமுயற்சினாலும் வாய்ப்பதாகும். ஆகவே, ஏனையோர்க்கு அது கூடாமை யறிக. செறிவு - அடக்கம். அதனை ``செறிவறிந்து சீர்மை பயக்கும்``* என்பதனாலும் உணர்க. தம்மியல்பாவது பிண்ட விந்துவிற்கு விரைய வீழ்ந்தொழிதலும், அண்ட விந்துவிற்குச் சொல்வடிவாய் நின்று, தன்னின் நீங்கித் தனித்து நிற்கவொட்டாது தளைத்து நிற்றலுமாகும்.இதனால், விந்து சயத்திற்குச் சாக்கிராதீதம் புரிதல் வழியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage