ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

English Meaning:
Conquer Bindu and Conquer Time

He that has conquered Bindu has conquered Time;
He that has wasted Bindu has perished before his time;
They know not that Bindu that has been preserved
In time becomes one with Kundalini,
Their breath controlled in the Yogic way.
Tamil Meaning:
விந்து சயம்பெற்றவன் பல்லாண்டுகள் வாழ்தலால் காலத்தைக் கடந்து நிற்பவனாவன். விந்துவை அழித்துவிட்டவன் குறிப்பிட்ட சிலகாலம் வரையில் எவ்வகையிலோ வாழ்ந்து மறைந்தவனாவான். இவ்விருவரும் முறையே கலவிக் காலம் உட்பட எந்தக் காலத்திலும் விந்துவைத் தன் உடலில் வற்றியிருக்கச் செய்தவனும், மாதி னொடு பிராணாயாம முறையில் அமைந்த கலவியை அறியா தவனும் ஆவர்.
Special Remark:
செறுதல் தடுத்தலும், அழித்தலும் ஆகிய இரு பொருளும் தருவதாகலின் அதனை இங்ஙனம் `பொருட்பின் வருநிலையணி` என்னும் நயம் தோன்ற இவ்வாறு கூறினார். ``காலங்கள்`` என்ற பன்மையால் எல்லாக் காலங்களும் கொள்ளப் பட்டன. `காரிகையொடு` என ஒடு உருபு விரிக்க. ஐயுருபு விரிப்பினும் ஆம். ``காலின்கண் வந்த கலப்பு`` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றபடி.
இதனால், விந்து சயம் பெற்றாரது உயர்வும், பெறாதாரது இழிவும் ஒருங்கு தொகுத்தக் கூறப்பட்டன.