ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.

English Meaning:
Regulation Days for Practising Yogis

Let those that Yoga practise
Avoid the fifth, the sixth and the eleventh days
After the woman menstruates;
The rest, who the pleasure seek,
Take the six days, in the middle
Of the three weeks that follow.
Tamil Meaning:
`பூப்பிற்குப் பின்னாட்களாகிய வளர்பிறையில் முதல் எட்டு நாட்கள் கூடதற்கு உரியன அல்ல` என மேல் விலக்கப்பட்டவற்றில் ஐந்தாம் நாளும், ஆறாம் நாளும் யோகியர்க்கு முற்றிலும் விலக்கத்தக்கன. (எனவே, `ஏனையோர்க்கு அந்நாட்கள் ஒருகாற் பொருந்தினும் பொருந்தலாம்` என்பதாம். பதினொன்றாம் நாள் யோகியர் அல்லார்க்கு ஆம்.) சக மார்க்கம் - யோக நெறி. வேறன்பு - மகளிரை விரும்புதல். ``சகமார்க்கத்தினிடையே வேறு அன்பை ஐந்து, ஆறு பதினொன்று அல்லாத நாட்களில் வேண்டுவர் நல்லோர்`` என்க. பூப்பிற்குப் பின் ஐந்து நாட்களில் அக்குற்றம் நீங்கியொழியும். (ஆயினும், `மேலும் `மூன்று நாட்கள் ஆகா` என முன் மந்திரத்தில் விலக்கப்பட்டன. அந்த ஐந்து நாட்களுக்கு மேல் இருபத்தொரு நாளில் பெண்மை சிறிது சிறிதாக மிகுந்து வரும் அந்த நாட்களில் இறுதி ஆறு நாட்களில் மிகவும் மிகுந்து நிற்கும். அதனால் இல்லறத்தில் நிற்கும் ஆடவர் அந்நாட்களில் கலவி செய்க.
Special Remark:
இவ்வாற்றால் முப்பது நாட்களில் இறுதிமூன்று நாள் பெண்மையில்லா நாட்களாயின. இவையெல்லாம் நெறி பிறழா தோரை வைத்துக் கூறியனவாம். ``ஏறும், ஓங்கும்`` என்னும் பயனிலை கட்கு, `குற்றம், பெண்மை` என்னும் எழுவாய்கள் ``பூவரின்`` என்ற குறிப்பாலும், அதிகார இயைபாலும் வந்தியைந்தன. இடைத்து = இடையதாய். ``ஐந்து`` என்பது செய்யுள் நோக்கிப் பின் வைக்கப்பட்டது.
இதனால், யோகியர்க்கும், பிறர்க்கும் உரிய சில வரையறைகள் கூறப்பட்டன.