ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்

பதிகங்கள்

Photo

கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.

English Meaning:
Embrace Woman after Cleansing Her

If you desire woman`s love, intense to excite,
The day before you in sexual union indulge,
Cleanse the woman of her bowel, phlegm and bile,
Then in union embrace her.
Tamil Meaning:
மாதினொடு கூடுவீர், நீவிர் அக்காதல் வாழக்கை இருவரிடத்தும் நலமாக அமைய வேண்டின் மேலெல்லாம் கூறிவந்த முறையில் குறித்த நாட்கு முன்னாளே அவளது உடம்பில் மலமும், சலமும் ஆகிய உபாதிகளும், வாதம், பித்தம், ஐ என்னும் அவற்றின் மிகை குறைகளும் இல்லாதபடி நீக்குதற்கு உரியவற்றைச் செய்து அதன்பின்னர்க் கூடுவீராக.
Special Remark:
`உடல் நலம் கெட்டிருப்பவளொடு கூடுதல் கேடு பயக்கும்` என்பதாம். ``மலம்`` என்றதனால் சலமும், `சீதம், பித்தம்` என்பவற்றைக் கூறியதனால் ஏனை வாதமும் கொள்ளப்பட்டது. இரண்டாம் தந்திரத்தில், ``மாதா உதரம் மலம்மிகில்`` என்னும் மந்திரம் கரு உற்பத்தி யின் வகையுணர்த்தற்குக் கூறினார்; இதனை விந்து சயம் பெறுவார்க்கு ஆவதுணர்த்தக் கூறினார் என்க. எனவே, இதன் கருத்து வகையும் பெறப்பட்டது.