ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுழை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

English Meaning:
Sakti`s Pervasiveness

She utters the Vedas Four,
The great Goddess, the Sakti;
She dons robes fine,
Her Feet compass world entire;
She stands elated
Pervading worlds and universes;
She stands adorned
With three lights, Sun, Moon and Fire.
Tamil Meaning:
நான்கு வேதங்களும் சொல்கின்ற பெருந்தெய்வம் (முதற்கடவுள்) ஆகிய பூரணசத்தி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு, பாதம் பூமியைக் கடந்தும், முடி வானத்தைக் கடந்தும் இருக்க, `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் முச்சுடர்களே மணிகள் இழைத்த அணிகளாய் அழகுபடுத்த நிற்பாள்.
Special Remark:
`உலகம் முழுவதையும் தனக்குத் திருமேனியாகக் கொண்டு விளங்குவாள்` என்றபடி. இதனையே `விசுவரூபம்` என்பர். விசுவம் - உலகம்.
`நான்மறை நவிலும் பெருந் தெய்வசத்தி` என மாறிக் கூட்டுக. உழை - பக்கம்; திசை. துகில் - உயர்வகைப்புடைவை. புலித்தோலே யல்லது மான்தோல் உடையாகச் சொல்லப்படாமையால், ``உழை`` என்பதற்கு `மான்` என உரைத்தல் பொருந்தாமை அறிக. நிலம் பொதி - பூமியை உள்ளடக்கிய. செம்மாந்து - நிமிர்ந்து; கடந்து.
``நிலமுதற்கீழ் அண்டம் உள நிமிர்ந்தது`` என்றல் காண்க. முதலடி உயிரெதுகை.
இதனால், `சில பொருள் அளவிலே வியாபகமாகாது, எல்லா உலகத்திற்கும் வியாபகமாகின்ற சத்தியே பூரண சத்தியாம்` என அவளது இயல்பு கூறப்பட்டது.