ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

English Meaning:
Sakti Devolves into Bindu and Nada

Siva-Sakti who in Thought,
Thus commenced evolution
As Bindu and Nada expanded;
She wears the orb of moon
As on Her matted locks
She is of Sattva Guna possessed
She is the Beginning and End
Thus is Her Form Divine.
Tamil Meaning:
மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.
Special Remark:
``விரிந்தனள்`` என இறந்த காலத்தாற் கூறியதும், `விரி யும் இயல்பினை உடையவள்` என்றதேயாம். இடைநின்ற ஏகாரம், பிரித்து, ``சத்தி` என்பதனோடு கூட்டப்பட்டது. ``பூமி`` என்பதன்பின் வினைமுதற் பொருண்மை உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது. `ஆதியதோடு அந்தமாம் வன்னம்` எனற்பாலதனைச் செய்யுள் நோக்கிப் பிறழக் கூறினார். அது, பகுதிப் பொருள் விகுதி.
இதனால், சத்தி, ஆதியாய் நின்று செய்யும் செயல்களெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.