ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

English Meaning:
Sakti Daily Prays to the Lord

Her glances are like arrows sharp,
She is the Mother Supreme
She is Manonmani
Her waist is slender like a tender vine
Her tresses are bedecked with flower garlands
Her Form is red gold,
Fragrant by far
Daily She looks at the Lord and prays.
Tamil Meaning:
சத்தி, சிவனது சிவந்த பொன் போலும் திரு மேனியில் நிறைந்த நறுமணம் கமழும்படி அவனையே நாள்தோறும் பற்றிப் பயில்கின்றாள்.
Special Remark:
முன்னிரண்டடிகளின் பொருள் வெளிப்படை. ``செறி கமழ்`` என்பது, `செறிந்து கமழ` எனப்பொருள் தந்தது. நவிலுதல் - பயிலுதல். முதலடி உயிரெழுத்தெதுகை.
இதனால், சத்தி மேற்கூறிய செயல்கள் அனைத்தையும் சிவனிடத்தில் நின்றே செய்தலன்றித் தனித்து நின்று செய்யாமை கூறப்பட்டது.