
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.
English Meaning:
The Mother of Jnana Decides Life-SpanOn the lovely lotus
That blossoms in cool waters
Is the Four-Headed God;
The years vouchsafed by Him here below
Are no more than a hundred;
The Mother of Jnana seated on blossom appeared;
She is the Mistress of Words, abiding in the tonque
Now it is Her command (how long you live).
Tamil Meaning:
காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின்மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.Special Remark:
தார் - மாலை; அது வரிசையைக் குறித்தது. ``உள`` என்னும் வினைக்குறிப்புப் பெயர், உண்மைக்கு இடமாய மலரினைக் குறித்தது. ``தான்`` என்பது பன்மை யொருமை மயக்கம். ``நூறு`` என்பது மலரின் இதழாதல் விளங்குதற்கு முதற்கண், ``தண்மலர் நான் முகன்`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். ஈற்றடியின் முதலில், `எல்லாம்` என்னும் எழுவாய் வருவிக்க. இதனுள் ஆசெதுகை வந்தது.இதனால், படைப்புத் தொழிலும் திரோதான சத்தியதாதல் கூறப்பட்டது. பொதுமக்களாய் உள்ளவர், உலகத்தைப் படைக்கும் தொழில் ஒன்றையே இறைவனது அதிசயத் தொழிலாக எண்ணுவர். ஆதலின், அஃதொன்றனையே இங்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage