ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

English Meaning:
Meditate on Muladhara

They know this not;
That Sakti Primordial espoused Siva
And together Perfection are;
She bestows Her Grace
On Her devotees;
She, the Virgin Eternal;
Meditate on Her in Muladhara, where She is
Success indeed shall be
Your yogic feat in breath control.
Tamil Meaning:
பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனைக் கும்பிப்பதே.
Special Remark:
``உணர்ந்திலர் ஈசனை`` என்றது, சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோரை நோக்கி யாதலின் அதனை, ``பூரணம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கொண்டு`` என்பதை, ``கொள்ள`` எனத்திரிக்க. ``உணர்ந்திலர் ஈசனை, ஊழி செய் சத்திபுணர்ந்தது பூரணம்`` என்றது, மேலதனை வலியுறுத்தியவாறு.
இதனால், சத்தியைப் பெறுதற்குரிய வழி கூறப்பட்டது.