ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி

பதிகங்கள்

Photo

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

English Meaning:
Seek Her and Transcend Time and Age

In the spaces vast
Where neither night nor day is,
She of fragrant tresses is;
Seek Her;
And in silence with Grace slumber,
You shall for ever youthful be
Transcending time and age.
Tamil Meaning:
`இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தி யையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.
Special Remark:
நினைப்பும் மறப்பும் ஆக மாறிமாறி நிகழும் மாயா உணர்வுகளை, `இரவு, பகல்` எனக் குறித்தல் மரபு. அவை அற்ற இடம் என்றும் ஒரு பெற்றியாய அருளுணர்வு. மகளிரது கூந்தலில் குராமலர் முடிக்கப்படுதலை ஒரு சிறப்பாகக் கூறும் இலக்கிய மரபு பற்றி,`` குரவம் செய்கின்ற குழலி`` என்றார். அரவம் செய்யாமை, மௌனமாய் இருத்தல்; என்றது செயலற்றிருத்தலை, பருவம் செய்தல், `காளை, முதியன்` என்னும் நிலைகளை அடைதல், `அவை இல்லாமை` என்றது, என்றும் ஒரு பெற்றியனாய் இருத்தல். எனவே, உலகியலால் வேறுபட்டு வருந்தாமை பெறப்பட்டது.
இதனால், அருட் சத்தியால் பாதுகாக்கப்பட்டவர்களது பெருமை கூறப்பட்டது.