ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
    தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
    சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
    ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
  • 10. படுவ திரண்டு பலகலை வல்லார்
    படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
    படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
    படுவது கோணம் பரந்திடும் வாறே.
  • 11. வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
    வாறே சிவகதி வண்துறை பின்னையும்
    வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
    வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.
  • 12. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
    அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம்
    அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம்
    அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.
  • 13. தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
    தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
    தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
    தானே தனக்குத் தலைவனு மாமே.
  • 14. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
    தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
    தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
    தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.
  • 15. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
    இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
    இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
    இணையார் கழலிணை ஏழா யிரமே.
  • 16. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
    ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
    ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
    ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
  • 17. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
    இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
    இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
    இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.
  • 18. தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
    தானே அகார உகாரம தாய்நிற்கும்
    தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
    தானே உலகில் தனிநடந் தானே.
  • 19. நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
    நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
    நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
    நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.
  • 2. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
    ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
    மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
    மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.
  • 20. செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
    செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
    செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
    செம்புபொன் னான திருவம் பலமே.
  • 21. திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
    திருவம் பலமாக ஈராறு கீறித்
    திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித்
    திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.
  • 22. வாறே சிவாய நமச்சிவா யந்நம
    வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
    வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
    வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
  • 23. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
    பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
    பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
    பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.
  • 24. பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
    பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
    பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
    பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.
  • 25. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
    நல்ல மடவாள் நயந்துட னேவரும்
    சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
    சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.
  • 26. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
    சூக்கும மான வழிஇடைக் காணலாம்
    சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
    சூக்கும மான சிவனதா னந்தமே.
  • 27. ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
    ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
    ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
    ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.
  • 28. மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
    மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம்
    மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும்
    மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.
  • 29. கூத்தே சிவாய நமமசி யாயிடும்
    கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
    கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
    கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.
  • 3. தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
    தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
    தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
    தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.
  • 30. ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
    ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
    ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
    மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.
  • 4. ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
    ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
    ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
    ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.
  • 5. தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
    தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
    தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
    தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.
  • 6. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
    தானே அகார உகாரம தாய்நிற்கும்
    தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
    தானே தனக்குத் தராதலந் தானே.
  • 7. தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
    தராதல வெப்பு நமவா சியஆம்
    தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
    தராதல யோகம் தயாவாசி ஆமே.
  • 8. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
    ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
    ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
    ஆமே சிவகதி ஆனந்த மாமே.
  • 9. ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
    ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
    ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
    ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.