ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்துறை பின்னையும்
வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

English Meaning:
Letters A and U are the Agamic Mantra

They are the Sadasiva;
They are the Agamas imperishable;
They are the Godly Goal,
They are the shady Mastwood Tree where bees indwell
They are the dance Holy;
They are the Agamic teachings divine,
They are the Immaculate Purity
Of the Divine Dance Hall.
Tamil Meaning:
மேற்கூறிய மூன்று மந்திரங்களும் சதா சிவ மூர்த்தியால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்களின் ஞானப் பகுதி களும், அவற்றால் அடையப்படும் சிவகதியாகிய வளப்பமான கடல் துறையும், அத்துறையில் மூழ்கினோர்க்கு ஐம்பொறி வழியிலும் அவ் வானந்தத்தைத் தருகின்ற திருநடனமும், மற்றும், ஆகமங்களின் கிரியைப் பகுதிகளும், ஞானிகட்கேயன்றிப் பிறர் அனைவர்க்கும் பொதுவாகச் செய்யப்படுகின்ற அம்பலக்கூத்தும் ஆகிய அனைத்து மாய் நிற்கும்.
Special Remark:
``இவ்வாறே`` எனச் சுட்டியுரைத்தல் கருத்தாகலின், ``வாறு`` என்பன மேற்கூறிய மந்திரங்களைச் சுட்டி நின்றன. ``சதாசிவம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகையில் ஈறு கெட்டுப் புணர்ந்தது. ஞானப் பகுதிகள் தம்முள் முரணுதல் இன்மையின், ``மாறிலா ஆகமம்`` என்றது அவற்றை யாயிற்று, ``பின்னையும்`` என்பது ``மற்றும்`` எனப் பொருள் தந்து, ஞானத்தின் வேறாகிய கிரியை முதலியவற்றைக்கூறும் குறிப்புணர்த்தி நின்றது. ``புன்னையும்`` என்பது பாடம் அன்று. இதனை, `திருக்கூத்து` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``அமலம்`` என்பது ஆகுபெயரால் அதனையுடைய கூத்தினைக் குறித்தது.
இதனால், மேலானவற்றின் சிறப்பு உணர்த்தப்பட்டது.