ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

படுவ திரண்டு பலகலை வல்லார்
படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

English Meaning:
Letters Two – A and U Became Five Letters

A and U are Letters Two,
All men of vast knowledge chant;
They are Letters Two
Into One and Five Letters resolve;
In them merge
The Tandava Dance of Dissolution;
In Muladhara Triangle they are,
Ascending high to Adharas rest.
Tamil Meaning:
யோக நூல்களிலும், ஞானநூல்களிலும் வல்ல வர்கள் பொருந்துவது ``அம், சம்`` என்னும் இரண்டெழுத்திலும், ஓங் காரத்திலும் திருவைந்தெழுத்திலும் சிவனது அருளல் நடனத்தின் அன்பிலும், அவையெல்லாம் பலவகைச் சக்கரங்களில் பரவி விளங்குகின்ற முறைமைகளிலுமாம்.
Special Remark:
``படுவது`` என்பன தொழிற்பெயர்கள். அவை சொற் பொருட்பின்வருநிலையாய் வந்தன. முத்தொழிலாகக் கூறுமிடத்தில் அருளல் அழிப்பில் அடங்குகின்ற முறை பற்றி, ஐந்தொழிலில் இறுதிக்கண்ணதை, ``சங்காரம்`` என்றார். ``கோணம்`` என்றது பலவகையாக வரையப்படும் சக்கரங்களை, ``இரண்டு, பஞ்சாக்கரம், பத்தி, கோணம், வாறு`` - இவைகளில் ஏழாம் உருபு விரித்துக் கொள்க. ``ஆறு`` என்பது சில இடங்களில் முதற்கண் வகரமெய் பெற்றும் வருதல் உண்டு. சங்கச் செய்யுட்களில் மகரமெய் பெற்று, ``மாறு`` என வருதல் அறியத்தக்கது. ஆறு - வழி; முறை. ``ஓங்கார பஞ்சாக் கரங்கள்`` என அஃறிணை உம்மைத்தொகை பன்மையீற்றொடு வந்தது.
இதனால், மேற்கூறிய மந்திரங்கள், தாண்டவம் இவை யோகத்திற்கும், ஞானத்திற்கும் வாயிலாதல் கூறப்பட்டது. புற வழிபாட்டிற்கும் உரியதாகப் பின்னர்க் கூறப்படும் சக்கரங்களும் இங்கு எதிரதுபோற்றிக் குறிப்பிடப்பட்டது.