ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 1. அசபை

பதிகங்கள்

Photo

செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

English Meaning:
Sivaya Nama Purifies and Transforms Jiva

Chant ``Sivaya Nama``,
Copper turns into gold;
The Chit Para there exists,
Turns copper into gold
Chant ``Srim`` and ``Krim;``
Copper turns into gold;
The Holy Temple alchemises
Copper into gold.
Tamil Meaning:
மேற்கூறிய, செம்பு பொன்னாவது போன்ற அதிசயப்பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைத்தற்பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும் செம்பொன் மய மான திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.
Special Remark:
இறுதியில் உள்ள ``செம்பு`` `செம்மை` என்றவாறு, `ஷ்ரீயும், கிரீயும் எனச் செம்பு பொன்னாகும், அது திருவம்பலம் ஆதலால்` என்க. `எனவும்` என்னும் எச்சவும்மை தொகுத்தல். `ஆதலால்` என்பது சொல்லெச்சம்.
இதனால், மேற்கூறிய ஞானநடனத்தின் பயனை எய்துமாறு கூறப்பட்டது.