ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

English Meaning:
Saum Sakti is of Surpassing Beauty

For this Maiden Innocence
Beauty is woman`s perfection embodied;
For Her the Lord is the father
The world vast is Her tilak;
Surrounded by maidens several
She takes Her place,
In the narrow crevice of Sahasrara.
Tamil Meaning:
பெண்ணாகக் காணப்படுகின்ற இச் சத்திக்கு அங்ஙனம் காணப்படுதலே ஏற்புடைத்து. இவளுக்குத் தலைவனாய் உள்ள சிவன் அங்ஙனம் தலைவனாதலேயன்றித் தந்தையாயும் நிற்கும் இயல்புடையவனாவான். அழகியாய் உள்ள இச்சத்திக்கு இப்பூ மண்டலமே நெற்றித் திலகமாய் நிற்க, எண்ணிறந்த சத்திகள் சூழ்ந்து பணி செய்ய, இவள் உயரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பெருமையுடையள்.
Special Remark:
`அப்பெண்மையே` எனச் சுட்டுவருவித்துத் தேற்றே காரம் விரிக்க. `பெண்மையே ஏற்புடைத்தாம்` என்றது, சிவத்தின் வழிநிற்பவளாதல் குறித்து. எனினும், இவளும், சிவனும் உலகத்துப் பெண்டிரும் ஆடவரும்போல இருவேறுபட்டவர்கள் அல்லர்` என்றற்கு, ``தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்`` என்றார். தாணு - தலைவன். தாணு தாதையுமாய் நிற்கும்` என மாறிக் கூட்டுக. மாது - அழகு. ஐகாரம் சாரியை. அழகு இயற்கையாலும், செயற்கையாலும் உள்ளது. அவற்றுள் செயற்கை `அழகில் பூமியே திலகமாகின்ற அத்துணைப் பெரியாள்` என்பதை மூன்றாம் அடியிலும், பிறர் யாவரும் இவளுக்குக் கீழ்பட்டவர்களே` என்பதை நான்காம் அடியிலும் குறித்தார். குவிதல் - இங்கு, உயர்தல், `குவிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.