ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

English Meaning:
Chant Hrim Sakti`s Name in Silence With Flowers

They flourish at Her Holy Feet
Who chant Her name in silence;
Who adore Her Feet with flowers
They know the way to reach Her feet.
Tamil Meaning:
சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.
Special Remark:
`சேர` என்பது பாடம் அன்று.
இதனால், அருச்சனையிலும் செபம் சிறந்ததாதல் கூறப் பட்டது. சக்கர வழிபாட்டில் செபமே முதன்மையாதல் வெளிப்படை.