ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

English Meaning:
Saum Sakti is Maiden Innocence

As you worship that golden vine
The exulting I-ness leaves you;
In the Chakra Sahasrara that represents the spaces vast
You shall see Her, close entwined,
She, the Maiden Innocence.
Tamil Meaning:
ஆதாரங்களில் விளங்கும் சாதன தேவியரைச் சிவச் சத்தியுடன் கூட வழிபடின், போக்குதற்கரிதாகிய அகங்காரம் நீங்கும். அங்ஙனம் வழிபட்டவன் அகங்காரத்தினின்று நீங்கி, நிறைந்த அமுதக்குடம்போலும் சந்திர மண்டலத்தில் சாத்திய தேவியாகிய சிவசத்தியைத் தலைப்படுவான்.
Special Remark:
``பொற்கொடியாளுடன்`` என மேற்போந்ததனை அனு வதித்ததனால், பூசிக்கப்படுவார் சாதன தேவியராதல் பெறப்பட்டது. அகரம், பண்டறிசுட்டு. ``அக்களியாகிய ஆங்காரம்``, இருபெய ரொட்டு. மத் கடமாகிய மண்டலம், சந்திர மண்டலம் சத்தியத்தை, ``பின்`` என்றார்.
இதனால், ஆதார தேவியரது வழிபாட்டின் இன்றியமை யாமை கூறிப்பட்டது. இரண்டாம் அடி இன எதுகை.