ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.

English Meaning:
Aum Sakti Appears as Light

In the seven seas and seven worlds will your fame be,
All your wishes granted will be,
If your heart in constancy stands,
When you see Sakti in you firm stands
She appears as the Light Radiant High.
Tamil Meaning:
அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.
Special Remark:
மூன்றாம் அடி தாப்பிசையாய் முன்னும். பின்னும் சென்று இயைந்தது. ``புவி`` என்றது தீவுகளை. `நினைத்தவாறே ஆம்` என்றது, `அவற்றைக் காக்கவும், அழிக்கவும் அவற்றைத் தன் விருப்பப்படி பயன்படுத்தவும் வல்லனாம்` என்றவாறு. மேலை விளக்கொளி - மேற் கூறப்பட்ட விளக்கொளி; `மேலிடமாகிய சந்திர மண்டலத்தில் விளங்கும் விளக்கொளி` என்றுமாம்.
இதனால், அக் காட்சியின் பயன் வேறும் சில கூறப்பட்டன.