
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.
English Meaning:
Krim Sakti is in Sun`s SphereIn the mystic sphere
Between centres, navel and heart, Is the Koopa (Krim) Sakti seated;
There in the fiery Sphere of Sun;
Unto the cool waters of a well was She.
Tamil Meaning:
நன்கமைந்த சூரிய மண்டலமானது பிராணவாயு கும்பிக்கப்பட்டுத் தங்கியிருக்கின்ற, கொப்பூழின் அடியாகிய சுவாதிட் டானத்திற்கும், இருதயத்திற்கும் இடைக்கண் உள்ள மணிபூரகத்திலும் கலந்து நிற்றலால், குளிர்ச்சியுடைய அந்த மணிபூரகமும் சிறந்து நிற்கின்றது.Special Remark:
மூன்றாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. ``ஆங்கு`` என்றது, `அவ்விடங்கட்கு` எனப் பொருள்தந்தது. சூரியமண்டல மாவது, `மணிபூரகம், அநாகதம்` என்னும் இரண்டு ஆதார எல்லைக் குட்பட்ட பகுதி. அஃது அன்னதாதலாலே நீர்மண்டலமாய் உள்ள மணி பூரகமும் சிறப்பதாயிற்று` என்றவாறு. நீர்மண்டலமே இன்னதாயிற்று என்றதனால், பிற மண்டலம் அதனால் சிறப்படைதல் கூறவேண்டா வாயிற்று. `ஞாயிற்று மண்டலத்தாலே யாவும் நலமுறுகின்றன` என்றவாறு. இங்ஙனமாகவே மேற்கூறியவாறு வானில் இயங்கும் வன்மை பெற்றவர் நலம்பல எய்துவர் என்பதாம். நீர்மண்டலமாயதை, ``கூபம்`` என்றார்.இதனால், மேற்கூறிய பயனைப் பெற்றாரது சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage