ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உம்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.

English Meaning:
Effect of Five Years Chanting Hrim Sakti

Sever your Pasa`s roots,
Adore Her in your heart`s recesses,
All evil will leave you;
In five years you shall be like Siva.
Tamil Meaning:
சத்தியை மேற்கூறிய வடிவினளாக உங்கள் உள்ளத்தில் அன்போடு தியானியுங்கள்; துன்பங்கள் யாவும் ஒழியும்; ஐந்தாண்டிற்குள்ளே, பிறவிக்கு முதலாகிய மலங்களைப் போக்கி, `பூமியிலே காணப்படும் சிவன்\\\' என்னும் நிலையை நீங்கள் அடையச் செய்வாள்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலிற் கொள்க. வேராதல் பிறவிக்கு. `கண்ணுதலாகுமே\\\' என்பது பாடம் அன்று. மேல், (1361) `ஓராண்டில் தினகரனாரிடச் செய்தியதாம்\\\' என்பது சிவயோக சித்தியைக் கூறியதும் இது சிவமாந் தன்மைப் பெருவாழ்வைக் கூறியதும் என்க.
இதனால், பிறிதொரு பயன் பற்றிய வழிபாடு கூறப்பட்டது.