ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

English Meaning:
Chant Mantra a Thousand Thousand Times

To speak of the Worship
That you should perform at Sri Chakra;
That holds the Virgin Sakti as its nodal pull
Worship the mantra with incantations a thousand thousand times.
Thus do you on it continuous meditate.
Tamil Meaning:
இச்சக்கரத்தில் வைத்துத் தியானிக்கப்படும் பொன் போன்றவளாகிய சத்தியுடன் பொருந்தத்தக்க சிறந்த வழிபாடு யாது என ஆராயின், சத்தியை மிக இளைவளாகவும், அவளுக்கு உரிய மந்திரம் இவ் எழுத்துக்களேயாகவும் கொண்டு, தேவிதன் ஆயிர நாமங்களால் ஆயிரமுறை அருச்சனை செய்தல் என அறிவாயாக.
Special Remark:
`பொன்னுடன் பொருந்தும் மாதவம்` என ஒருசொல் வருவிக்க. `தைத்து` என்பது \\\"தச்சு\\\" எனப் போலியாயிற்று. கைச் சிறு - மிகச் சிறிய. தைத்தல் - உள்ளத்தில் பொருத்துதல். `சமைந்த இம் மந்திரம் இதுவாக` என மாற்றிக் கொள்க. இது, இந்நிலை; தேவி இளை யளாய் விளங்கும்கோலம். `ஆயிரம் ஆயிரம் எனச் சிந்தி` என்க. சிந்தி - சிந்தித்து உணர். இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.
இதனால், `இச்சக்கரத்தைத் தேவியது ஆயிர நாமத்தால் ஆயிர முறை அருச்சிக்க` என்பது கூறப்பட்டது.