ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

English Meaning:
Chant Klim to Begin; Sakti Appears

She beams as divine light in your thoughts
She appears with hands six
She holds in them weapons six —
The torch, the trident, the goad, the noose, bow, and arrow
Chant the Mantra with Klim to begin,
She before you appears.
Tamil Meaning:
வழிபடுவோரது உள்ளத்திலே ஒளி விட்டு விளங்கு பவளாய், `க்லீம்` என்னும் பீசத்தை முதலில் வைத்துக் கணிக்க அங்ஙனம் கணிப்பவர்களது கண்முன் தோன்றிநின்று அருளுகின்ற சத்தியாகிய எம் தாயது ஆறு கைகளிலும் உள்ளவைகளில் படைகள் ஆவன, விடாது பறறிய `சூலம், பாசம், வில், அம்பு` என்பன.
Special Remark:
ஏனை இருகரங்கள் அபயமும், வரதமுமாதல் நன் கறியப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. `எந்தை` என்பதும், `உள்ளது` என்பதும் பாடம் அல்ல. `இருமூன்றிலும்` என உருபு விரித்து, \\\"படை\\\" என்பதை அதன் பின்னர்க் கூட்டி உரைக்க.
இதனால், நவாக்கரிசக்கரத்துள் ஒன்றில் விளங்கும் சத்தியது வடிவு கூறப்பட்டது.