ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.

English Meaning:
The Sadhaka Shines Bright

Sorrow`s fumes will not be;
A golden light will suffuse their body;
Hell none will be, as killing there is none,
Nothing else the refuge for all life on earth,
Nothing else is their crown of glory
For those who meditate on Krim
In Chakra Navakkari.
Tamil Meaning:
மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.
Special Remark:
தொடர்பு தோன்ற, ``புகையில்லை`` என அனு வதித்தார். ``குகை`` என்றது, `கரந்துறையும் இடம்` என்றவாறு. அஃறிணையும் அடங்க, ``கொல்வது`` எனப் பொருளாக வைத்துப் பொதுப்பட ஓதினார். கொல்வது, சாதி யொருமை. இதனைத் தொழிற் பெயராக வைத்து, `பாவம் இன்மையால் நரகம் இல்லையாம்` எனவும் உரைப்ப. ``சிகை`` என்று, மேல் உள்ளதனைக் குறித்ததாம். சிகை யில்லையாகிய சக்கரம் என்க. `சேர்ந்தவர்தாமே` என்பது பாடமன்று.