ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்

பதிகங்கள்

Photo

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

English Meaning:
Ignorance Dies by Worship of Krim Sakti

Those who meditate on Her
Glow in fame in directions all;
They experience not the evils of searing Karma;
Their inner light spreads far and wide;
Their egoity perished,
The light of differentiated knowledge
Forever snuffed out.
Tamil Meaning:
இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.
Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `திசைக்கு` என நான்காவது விரிக்க. மாறுஒளி - திரிந்த உணர்வு. ``மாய்ந்தது`` என்பதை இதனோடும் கூட்டுக. முதலடி இனவெதுகை.
இவை நான்கு மந்திரத்தாலும் இச்சக்கர வழிபாட்டின் பயனே கூறப்பட்டது.