ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
    நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
    ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
    ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.
  • 10. ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
    ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
    ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
    ஆகும் சிவபோ தகம்உப தேசமே.
  • 11. தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
    ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
    பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
    வாசா மகோசர மாநந்தி தானே.
  • 12. தானது வாகும் சமாதி தலைப்படில்
    ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
    ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
    ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.
  • 13. ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
    ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
    கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
    தேறிய மோனம் சிவானந்த உண்மையே.
  • 14. உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
    உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
    உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
    உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.
  • 15. ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
    தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
    வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
    கூவி அருளிய கோனைக் கருதுமே.
  • 16. கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
    அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
    வரும்சம யம்புறம் மாயைமா மாயை
    உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
  • 17. வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
    போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
    நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
    மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.
  • 18. வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
    நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
    மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
    போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.
  • 19. அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
    உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
    பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
    கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.
  • 2. அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
    அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
    அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
    அந்தமொ டாதி அறியஒண் ணாதே.
  • 20. கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
    தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
    பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
    ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.
  • 21. ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
    இருவினை உன்னார் இருமாயை உன்னார்
    ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
    அருவனு மாகிய ஆதரத் தானே
  • 22. அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
    வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
    உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
    திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.
  • 23. வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
    நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
    போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
    சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.
  • 24. சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
    அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
    சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
    நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.
  • 25. சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
    சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
    சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
    சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
  • 26. சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
    அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
    நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
    தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.
  • 27. தத்துவ மாகும் சகள அகளங்கள்
    தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
    தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
    தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.
  • 28. வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
    நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
    பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.
  • 29. பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
    பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
    விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
    பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.
  • 3. தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
    ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
    தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
    ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.
  • 30. ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
    ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
    ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
    ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே
  • 31. அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
    ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
    நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
    மன்றாடி பாதம் மருவலும் ஆமே.
  • 32. அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
    அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
    தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
    வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.
  • 33. உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
    அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
    செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
    அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.
  • 34. மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
    சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
    அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
    துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.
  • 4. நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
    சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
    சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
    அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.
  • 5. மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
    மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
    மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
    ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.
  • 6. உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
    தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
    உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
    எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.
  • 7. தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
    ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
    பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
    கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
  • 8. கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
    விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
    உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
    தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
  • 9. தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
    ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
    அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
    தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.