ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

English Meaning:
Nadanta Bodhata States

Jiva transcending
The tribulations of Tattvas
Six times six,
Reaches the Nadanta;
Ascending still beyond,
It encounters darkness of Anava;
When that is dispelled,
The peerless Divine Jnana dawns;
That indeed is Jnana (Bodha)
That Nadanta beyond reached.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.
Special Remark:
ஆறாறு - ஆறாறன் தொகுதி. ``நாதாந்தம்`` இரண்டனுள் முன்னது அவ்விடத்து விளங்கும் ஆன்ம அறிவைக் குறித்தது. ``மேல் உள்ள`` என்றது, `மாயைக்கு மேல் உள்ள` என்றபடி. இருள் அருளாலன்றி நீங்காமை வெளிப்படை. ஓர் உணர்வு - தன்னோடு ஒப்பது வேறொன்றிலாத உணர்வு; சிவனது உணர்வு. உயிர் நாதாந்தத்தை அடைந்தமை முன்பே கூறப்பட்டமையால், ஈற்றில், ``நாதாந்தத்து`` என்றது, `அவ்விடத்து` என்னும் சுட்டளவாய் நின்றது. இங்கு, ``போதம் எய்திடும்`` என்றதனால், `போதம்` எனப்படுவது சிவபோதமே என்பது விளங்கும். விளங்கவே, போதாந்தமாவது, ஆன்மா, தான் சிவஞானத்தில் முற்றி நிற்கும் நிலையே போதாந்தம் என்பது போந்தது.
தத்துவம் முப்பத்தாறனையும் கடந்தவழி இருமாயை களையும் கடந்ததாம். மாயைகள் ஆணவத்தைப் போக்கவே இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலின், `அவை நீங்கியவிடத்து ஆணவம் நிற்றல் இயல்பு` என்பது பற்றி, ``நாதாந்தத்தைச் சென்று மேல் உள்ள இருள்`` என்றும்,
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்;
ஒன்று மேலிடின் ஒன்று
ஒளிக்கும்; எனினும் இருள் அடராது``*
என ஓதியபடி, நாதாந்தத்ததில் ஆணவமே யன்றிச் சிவமும் உளதாக, பக்குவம் இல்லாத பொழுது மேலிடுகின்ற ஆணவம், பக்குவம் வந்த பொழுது மேலிடமாட்டாதிருக்கச் சிவமே மேலிடும் ஆதலின் ``இருள் நீங்க`` என்றும், சிவம் மேலிட்ட வழி ஆன்மா அதனைப் பற்றுதற்குத் தடை இன்மையால், ``ஓர் உணர்வு ஆகுமேல்`` என்றும் கூறினார்.
இதனால், `போதமாவது இது` எனவும், அதனை அடையு -மாறும் கூறும் முகத்தால், ஆறந்தங்களுள் போதாந்தம் கூறப்பட்டது. `போதாந்தமே முடிநிலை` என்பவர் பாடாண வாத சைவர் முதலிய அகச் சமயிகள். இவர்களை, `பூர்வ சைவர்` - என்பர் சிவாக்கிர யோகிகள்.