ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

English Meaning:
Lord Engrosses All Existence

Centre on Kundalini in Muladhara
That Guru by his power taught,
Perform acts
That lead to God,
Sing in full His holy praise,
Thus worship Him,
Then shall you meet the Being One
Who, existence interminable, engrosses.
Tamil Meaning:
சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய் வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க் -குயிராய் நீங்கா -திருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.
Special Remark:
கோ - யாவர்க்கும் தலைவன்; சிவன். அவன் முன்னர்த் திரோதான சத்தியால் உலகத்தையே உணர்த்துவான். பின்பு அருட் சத்தியால் உலகத்தை மறைத்துத் தன்னை - உணர்த்துவான். அதுவே சத்திநிபாதமாம். அதுதான் மந்ததரம் - மந்தம் முதலாகப் பல வகைப் படுதலின் அதற்கேற்ப குரு முன்னர் `சரியை, கிரியை, யோகம்` என்ப வற்றை உணர்த்தி, முடிவிலே ஞானத்தை உணர்த்துவார். அவற்றுள், ``கருமச் செய்தி`` என்பது சரியையும், ``அற்சனை`` என்பது கிரியா யோகங்களையும் குறித்தன. யோகமும் அருவத் திருமேனி அருச் சனையே. ``செய்ய, பார்ப்ப`` என்பன வினையிடத்து வந்த செவ்வெண். தே - சிவனேயான குரு. பா - பாட்டாயினும் மந்திரமே. ``அற்சனை பாட்டேயாகும்``* என்றது காண்க. படைத்தல் - சமர்ப்பித்தல். பாரித்தல் - மிகுதியாகச் செய்தல். ``ஓ`` என்னும் முதனிலையே. `ஓவும்` என முற்றுப்பொருள் தந்தது. `அனைத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்த -லாயிற்று. `ஒழியாத ஒருவனே உண்டு` என மாற்றியுரைக்க.
இதனால், `ஞானத்திற்கு வழி சரியை கிரியா யோகங்கள்` என்பது சித்தாந்தம் ஆதல் கூறப்பட்டது.