ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

English Meaning:
Serenity in Samadhi

In Samadhi Jiva with Siva
One becomes;
In Kalanta, in Nadanta, in Yoganta
And in Bodhanta and Siddhanta
Is Jnana reached
Of Knowledge, the Known and the Knower
One uniting.
Tamil Meaning:
(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.
Special Remark:
`அந்நிலை உபதேச கலாந்தமாகிய சித்தாந்தத்திலல்லது இல்லை` என்பது கருத்து. ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படும் பொருள். ஞாதுரு - அறிபவன். இவை முறையே `காட்சி, காணப்படு பொருள், காண்பான்` எனவும் கூறப்படும். இவை `திரிபுடி` எனப்படும். `மூன்று பொருள் இல்லை; ஞானம் ஒன்றே உள்ளது` என ஏகான்மவாதம் கூறும். `மூன்று பொருள்கள் உள்ளன. ஆயினும் உணர்பவனது உணர்வில் அம்மூன்றும் மாறி மாறித் தோன்றும் நிலை சிவானுபவ நிலையாகாது. அவனது உணர்வில் ஞேயமாகிய சிவம் ஒன்றுமே தோன்றும் நிலையே சிவானுபவ நிலை. அதுவே பரமுத்தி` என்பது சித்தாந்தம். இவற்றுள் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துச் சித்தாந்தக் கொள்கையை வினா வெண்பா, பின்வருமாறு நயம்பட வலியுறுத்துகின்றது.
``காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``l
இம்மந்திரத்தில் ``சமாதி`` என்றது பாவனையளவாக நிகழும் யோகசமாதியன்று. ஞானசமாதி. இதுவே திருக்களிற்றுப்படியாரில் கூறப்பட்டது.
(இதனாலும் மேற்கூறிய கருத்தே வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.3