
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
English Meaning:
Kalanta StateWhen the goal is Truth of Kalanta,
This then is the way;
Ascend Kalas (five) 1 Nivritti, and the rest
And Medha and the rest ten and six2;
There encounter Bindu;
In it do merge and vivid know
The Truth of Kalanta.
Tamil Meaning:
`ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.Special Remark:
நிவிர்த்தி முதலிய சத்திகளாவன, `நிவிர்த்தி, பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்துமாம். இச்சத்தி களுக்கு இடமாகின்ற சுத்த மாய விருத்திப் பகுதிகளும் இச்சத்திகளின் பெயர்களையே உடையன. `உலகம் ஆறு அத்துவா மயமானது` எனக்கூறுமிடத்து, ஏனை ஐந்து அத்துவாக்களும் கலாத்துவாவிலே அடங்கும். அதனால் அத்துவ சுத்தி, `கலாசுத்தி` என்றும், `கலா சோதனை` என்றும் சொல்லப்படும். இந்தச் சுத்தி, அல்லது சோதனையே நிருவாண தீக்கையாதலின் `தீக்கையே முத்தியாம்` எனக் கூறும் ஒருசார் சைவர்கள் `கலாந்தத்தில் பஞ்ச கலாந்தம்` என்பர்.இனிப் பிராசாத கலைகள் மூன்றாம் தந்திரத்து. `கலை நிலை` என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டன. `அவைகளை முன்னர் ஆராய்ச்சியால் உணர்ந்து பின்னர் அனுபவத்திற்காணுதலே முடி நிலை` என்பவர் `கலாந்தத்தில் பிராசாத கலாந்தர்` என்க. இவரை யோக சைவர்` அஃதாவது, `பிராசாத யோகமே முத்தியைப் பயக்கும் - எனக் கூறும் சைவர் என்பதாம். இவரும் ஐக்கிய வாத சைவர் போல ஆணவ மலத்தை உணராதவர் ஆதலின், அவரோடு ஒப்பர் என்க.
ஈசானம் முதலிய பஞ்சப் பிரம மந்திர சத்திகளாகிய ஈசானி முதலிய ஐந்தும், அவைகளில் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டும் - ஆக முப்பத்தெட்டாய் நிற்கும் சத்திகளும் `கலை` எனப்படுதலால், அவற்றைத் தெளிதலும் கலாந்தமாம் என்பாரும் உளர். அவை மந்திர கலைகளாய் நாதாந்தத்தில் அடங்குத -லாலும், நாயனார் அவ்வாறு ஓதாமையாலும் அவைகளை இங்குக் கொள்ளல் வேண்டா என்க. ``ஆதிக்கு`` என்பது கண்ணுருபின் பொருளில் வந்து உருபு மயக்கம். `ஆம்` என்பதனை, `ஒடுங்கலும்` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, தோன்றுதலைத் தழுவிய எச்சவும்மை.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் கூறப்பட்டது. அஃது இருவகைத் தாதலும் உடன் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage