ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்

பதிகங்கள்

Photo

தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

English Meaning:
Jnana

The way of Self-Jnana
Is to be one with Siva;
In the Kalanta
Devotional love disappears;
Sans speech, sans sentience
Jiva becomes Being Great
Like Nandi Himself,
That is beyond speech and thought.
Tamil Meaning:
ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரம சிவன் ஆவான்.
Special Remark:
தன் ஞானம் - சிவ ஞானம். `அதனை உணர்த்தும் கலை` என்க. அக்கலைகள் பலவும் திருவைந்தெழுத்தில் அடங்கும், ``கலை, கலாந்தத்து`` என்பவற்றில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆசார நேயம்`, உம்மைத் தொகை. அறைதல் - வலியுறுத்தல். அறையும் - அறையப்படும். `பேசாது` என்பது ஈறு குறைந்துநின்றது. உரை, சொல்லப்படுவது. உணர்வு - சொல்லவாராது உணர்வு மாத்திரையாய் நிற்பது, பெருந்தகை, ஆகுபெயர். இவ்வொருமை சாதி யொருமை. நந்தி - சிவன், மாநந்தி - பரமசிவன். ``மாநந்திதானே`` எனத் தேற்றேகாரத்தால் `வேற்றுமையில்லை` என வலியுறுத்தியது. அத்தன்மை குறைவின்றி நிரம்புதல் பற்றி இங்ஙனம் வலியுறுத் -ததனானே, `அவன் பொருளால் வேறே` என்பது பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய ஐந்து கலாந்தங்களுள் உபதேச கலாந்தத்தின் சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.