ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.

English Meaning:
Experience in Para Turiya

The Turiya State holds
The Letter-Five (Panchakshara);
In the Para Turiya Jagrat State
Are the letters Fifty and One;
In the Para Turiya Svapna State
Is Nada;
In the Para Turiya Sushupti State
Is Bodha;
Beyond appears Paramam (Brahmam).
In Para Turiya-Turiya State.
Tamil Meaning:
சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தை ஐந்திலும் வாக்குக்கண் அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாய், (அ, உ, ம, விந்து, நாதம் - என்பனவாய்)த் தூலமாய் நிகழும். (எனவே, அவ்விடத்து உலக வாசனை இருக்கவே செய்யும் என்பதாம்.) நின்மலா வத்தைக்கு மேலான உண்மைச் சுத்தாவத்தையில் அவ்வாக்குக்கள் சூக்குமமாய் நிகழும். (அதனால், உலக வாசனை தோன்றாவிடினும், `யான்` எனது என்னும் உணர்வினால் ஞாதுரு ஞான ஞேய வேற்றுமை நிகழவே செய்யும்.) அந்த வேற்றுமையும் அறுவது பர துரியத்திலாம். (அவ்விடத்தில் ஆன்மா அருள்மயமாய் நிற்கும்.) அதன் பின்பு மேலானதாய அதீதம் தோன்றும். (அதில் ஆன்மா ஆனந்தமயமாய் இருக்கும்.)
Special Remark:
`துரியம்` என்பது, `மலாவத்தைகளைக் கடந்தது` என்னும் பொருட்டாய், நின்மலாவத்தையைக் குறித்தது. `ஐந்திலும்` என உருபும், `ஆதியாய், மந்தமாய்` என ஆக்கங்களும் விரிக்க. `சொல், நாதம்` என்பன வாக்கைக் குறித்தன. `விரிய, புரிய, தெரிய` என்ற அனுவாதத்தானே விரிதலும், புரிதலும், தெரிதலும் பெறப்பட்டன. விரிதல் - தூலமாய் நிகழ்தல். புரிதல் - இடையறாது நிகழ்தல். தெரிதல் - விளங்குதல். `மந்தம்` என்றது சூக்குமத்தைக் குறித்தது. `பரை` இரண்டில் முன்னது ஆகுபெயராய்ப் பராசத்தியால் நிகழும் பராவத்தையைக் குறித்தது. மூன்றாம் அடியில் அவை நேராகவே கூறப்பட்டன. பராவத்தா போதம் - பராவத்தையில் நிகழும் திரிபுடி ஞானம். இது வடமொழிச் சந்தி. திரிய - வேறுபட; நீங்க. `திரிய` என்னும் எச்சம் `தெரிய` என்னும் எச்சத்தோடும், அவ்வெச்சம் `பரமம்` என்பதில் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடும் முடிந்தன. `பராவத்தா போதம் திரியத் துரியம் தெரியப் பரமம்` என வினைமுடிக்க. பரம் - மேலான அதீதம்.
இதனால், `பந்தம் சூக்குமமாய் நிற்கும் அவத்தைகளும் பின் அது முற்றும் அறும் அவத்தையும் இவை` என்பது சொல்லப்பட்டது.