
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.
English Meaning:
Sublimation of ThoughtThink of wood
Image of toy-elephant recedes;
Think of toy-elephant
Image of wood recedes;
Think of elements five
Thought of Param recedes
Think of Param
Thought of elements recedes.
Tamil Meaning:
மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.Special Remark:
இவற்றிற்கும் காரணமும், மேற்கூறிய அபக்குவ பக்குவங்களே என்பது வெளிப்படை.இதனால், மேற்கூறிய அந்தப் பொருளே பரம் பொருளின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இதுவும் அவ்வுவமை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage