ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.

English Meaning:
Self-Realization in Turiya State is not the End

Knowing not your Self
You deemed body as Self;
When in Turiya you entered,
You realized the Self;
Even though you realized Self,
Birth`s cycle will leave you not;
(Therefore, ascend further upward Into the Turiyatita State)
And unite in Lord,
Pervasive and Pure.
Tamil Meaning:
மாணவனே, நீ கீழாலவத்தை மத்தியாலவத்தை -களில் நின்ற பொழுது உன்னையே நீ, `யார்` என்று அறிந்து கொள்ளாது, உடம்பையே, `நான்` என்று சொல்லிக் கொண்டிருந்தாய். பின்பு, நின்மலாவத்தையை அடைந்தபொழுது உன்னை நீ, `சடமாகிய உடம்பின் வேறாகிய சித்துப் பொருள்` என அறிந்து, அதன்கண் துரிய நிலையிலே சிவன் உன்னையே தானாகக் கொண்டு நிற்கும்படி அவனது அருள் வழியில் நின்றாய், எனினும் ஆன்மாத் தன்னையும், தலைவனையும் அறிந்து அவனது அருள் வழியில் நின்ற அளவிலே அதற்குப் பிறவி நீங்கி விடாது. `சிவன் எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து நின்றானாயினும், அவனது உண்மை நிலை பிறிதொன் றோடும் கூடாது அனைத்தினும் வேறாய் நிற்கு தூய்மையே` என்பதை அறிந்து, அவனை அந்நிலையிலே சென்று தலைப்படமுயல்.
Special Remark:
`அம்முயற்சியாவது, நின்மலாவத்தையையும் கடந்து பராவத்தையை அடைய முயலுதல்` - என்பது குறிப்பு, ஈற்றில் தந்துரைத்தது இசையெச்சம். `முள்` என்றது, `ஞானவத்தைக்கு முன்` என்றது. ஆகையால் அது, கீழாலவத்தை மத்தியாலவத்தைகளையும், அறிதல் ஞானத்தினால் ஆதலின், `அறிந்து` என்றது, ஞானாவத்தை யாகிய நின்மலாவத்தையையும் குறித்தன. உறுதற்கு வினை முதல் வரு வித்துக் கொள்க. `அமலன்` என்றது, `சகலாவத்தைக்கு அப்பால் நிற்பவன்` என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது. எனவே, சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையும் கடந்து, பராவத்தையில் செல்லுதல் வேணடும்` என்பது போந்தது. அன்ன வியாத்தன் - அத்தன்மை யாதான ஒரு நிறைவினையுடையவன்.
இதனால், நின்மலாவத்தையும் சகலத்தில் சுத்தமேயாக, பராவத்தையே உண்மைச் சுத்தம்` என்பது கூறப்பட்டது.