ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

English Meaning:
End of Para Turiya is Siva Turiya

Succeeding Para Turiya Jagrat State
Is the Para Turiya Svapna State
That engrosses the universe entire;
Then is Para Turiya Sushupti State
Where Upasanta (Peace beyond understanding) is;
That transcending, Jiva reaches Siva Turiya State.
Tamil Meaning:
பராவத்தையில் சாக்கிரம் சீவன் முத்தி அதில் உலக அனுபவம் சிவானுபவமாய் நிகழும், (அதுவே,
`பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`l
எனக் கூறப்பட்டது.) அந்த அனுபவம் அதிகார முத்தியில் பழக்க வாசனையாய் நிகழும். அதுவே பர சொப்பனம். போக முத்தியில் அந்த வாசனையும் தாக்கமாட்டாது நீங்கும். அதுவே பர சுழுத்தி. (இதில் சுத்த தத்துவ போகத்தில் இச்சையுண்டாம்) அந்த இச்சையும், அதனால் வரும் அந்தப் போகமும் அடங்கி நிற்றலே `உபசாந்தம்` எனப்படும். அது பர துரியம். அதை அடைந்தவன் மேல்நிலையை அடைந்தவனாவன். `சிவ துரியம்` எனப்படுகின்ற நின்மலத் துரியத்தை அடைந்தவனும் இந்நிலையை அடைந்தே உயர்வு பெறுதற்குரியன்.
Special Remark:
காயம் இருந்து நீங்கின பாத்திரத்தில் அதன் வாசனை பதித்திருத்தல் போன்ற பதிவை, `திரம்` என்றார். திரம் - நிலைப்பு. `கனவில் வாசனை உண்டாம்` என்றதனால், நனவில் அனுபவந் உண்மை பெறப்பட்டது. வாசனை தாக்காத உறுதி. `உறும்` எனப் பட்டது. `உரம் சிறந்த சுழுத்தியாம்` என்க. முற்றல் - முதிர்தல். துறவு - கீழ் நிலைகளின் நீங்குதல்; அது துரியம். `சிவ துரியத்தனும் ஆம்` என்பது `ஒரு தலையாக ஆவன்` என்றதாம். உபசாந்தம் துரியம் ஆகவே, இன்பம் துரியாதீதம் ஆயிற்று. ஆகவே, `முடிநிலை உயர்வு பராவத்தையே` என்பது பெறப்பட்டது.
இதனால், பராவத்தைகளின் இயல்பும், `அவைகளே முடிநிலை உயர்வு` என்பதும் கூறப்பட்டன.