ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

English Meaning:
Beyond Turiya State is Union in Siva

This body is to birth subject,
Turiya State belongs to body and Jiva alike;
These subject to birth and death are;
When on them Grace of Holy Guru descends,
Two there is none,
Jiva in Siva unites one.
Tamil Meaning:
கருவிற்கு உட்படுதலையுடைய உடம்பில் நிகழ் வதாகிய துரியத்தில் நீயும், சிவனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டீர்கள். (அது போதாது; ஏனெனில்,) பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழல்கின்றவர்கள். ஞான குருவின் அருளைப் பெற்றுச் சிவனும், தாமும் வேறறக் கலந்த பின்பே தாம் சிவனின் வேறாய சீவராய் நில்லாது. சிவமாகி நிற்பர்.
Special Remark:
`அங்ஙனம் நின்றவரே பிறப்பிறப்பு அற்றவராவர்` என்பது குறிப்பெச்சம். `துரியத்தில்` - ஏழாவது விரிக்க. `துரியத்து` எனப் பாடம் ஓதுதலும் ஆம். கூடுதலுக்குச் செயப்படுபொருளாகிய `சிவனை` என்பது வருவிக்க. `கண்டீர்` என்றதனால், அது சிவ தரிசனமும், `கூடிய` என்றதனால் அது சிவயோகமும் ஆயின. சிவ தரிசனமும் குருவருளால் பெறற்பாலதே யாயினும் பிறப்பறுதியைத் தரும் சிறப்புப் பற்றிச் சிவயோகமே குருவருளால் பெறப்படுவது போலக் கூறப்பட்டது. சிவதரிசனத்தளவில் நின்றவர் பிறப்பெய்து தலை நோக்கிச் சிவயோகத்தில் நின்றவர் பிறப்பெய்துதல் சிறு பான்மையாதலின், அவர்களைப் பிறப்பறப்பு அற்றவராகக் கூறினார். அங்ஙனம் கொள்ளாக்கால் மேல், ``தன்னையறிந்தும் பிறவி தணவாது`` என்றதனோடு முரணும் என்க. சிவயோகமே துரியமாக, சிவதரிசனம் சுழுத்தியே யாயினும் அது துரியத்தின் தோற்றுவாயாதல் பற்றி அதனையும் `துரியம்` என்றார். `நின்றார்` என்பது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாக வந்த கால வழுவமைதி.
இதனால், `தம்மை உணர்ந்து தலைவனை உணர்தலாகிய நின்மலாவத்தைய அடைதற்குக் குருவருள் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றால் நின்மலாவத்தையை அடைந்து பராவத்தையை எய்துதல் கூடும்` என்றற்கு.