ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.

English Meaning:
Maya Gives States of Experience For God`s Grace to Attain;
Jnanis Reach Mukti Direct

Maya feeds Jiva with Avasta experiences unbroken,
For the Jiva by Lord`s Grace
To attain Mukti;
But the Jivas in Jnana born
Them Maya nears not;
And contemplating in Jnana
They direct attain Mukti.
Tamil Meaning:
இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்த மாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையுமாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப் பெற்றுப்பின் முடிநிலையாகிய பரமுத்தியை அடையும்.
Special Remark:
``ஊட்டிடும் மாயை`` என்றதனால் அவை மாயேய மாயின. எனவே, `மாயேயத்தின் ஒட்டற்று நிற்கும் நிலையும், அதுவும் இன்றி நீங்கி வைந்தவத்தோடு நிற்கும் நிலையுமே சுத்தாவத்தை` என்பதும் கூறியவாகும்.
ஏர்முத்தி - எழுச்சியையுடைய முத்தி முடிநிலை முத்தி. `ஊட்டிடும் மாயையும் உண்ணும் தன் ஊடாடாது அண்ணல் அருள் பெறல் ழுத்தியதாவது; அவனை நண்ணல் இலா உயிர்` என உரைக்க. ஞானத்தினால் - ஞானத்தினோடு.