
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.
English Meaning:
Conquer the Five Elements and the Four KaranasThe Earth and Water expanses;
The Fire that blazes in colour gold,
The Wind and Space
The Mind, Will, Intellect and Egoity
On their quintessence,
You in succession contemplate;
Then victorious you stand, the elements vanquishing.
Tamil Meaning:
மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத் தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றி லிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றிய தாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.Special Remark:
`நீரில் உள்ள மலர்கள் மண்ணில் தோன்றியன` என்றதனால், `நீர் மண்ணில் தோன்றவில்லை; மண்ணே நீரில் தோன்றியது` என்பது குறிக்கப்பட்டது. யாப்புக்கு ஏற்பச் சொற் சுருங்கி வருதற்பொருட்டுத் தனித் தனியாகக் கூறாமல், தொடர்ப் படுத்திக் கூறினார். பொன், உவம ஆகுபெயராய்த் தீயைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப்பகுதியைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப் பகுதியைக் குறித்தது. `வளியின், ஆகா யத்தின்` - என அவ்விடங்களில் தொகுக்கப்பட்ட நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபை விரித்து, `வளி` - என்பதை இரண்டாம் முறையும் ஓதுக. `புத்தி ஆங்காரம், என்பது, `புத்தியினின்றும் தோன்றிய ஆங்காரம்` என ஐந்தாவதன் உருபும் பயனும் உடன் தொக்கதொகை. அதன்பின் இன்னுருபு விரித்து, `மன்னும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `புத்தி ஆங்காரத்தின் மனம் மன்னும்` என்க. அனைத்தும் நான்கடிகளுள் அடங்கு மாறெல்லாம் கருதி இவ்வாறு அடக்கி ஓதினார்.பூத சயம் - பூத காரியமாகிய உடம்பை வென்று மீளும் வெற்றி. `பூத சயம் கூடும்` என்பதில் `கூடும்` என்பது அவாய் நிலையாய் நின்றது. அகங்காரத்தினின்றும் மனத்திற்குப்பின் தோன்றிய ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் உளவாயினும் அவை ஓராற்றால் பூதங்களின் அடங்குதல் பற்றி ஓதாது விடுத்தார். `ஒருபூ சயமே` என்பதை `ஒருபூத தசயமே` - என வகையுளியாக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage