ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.

English Meaning:
Tattvas in Deep Sleep

Having reached the Deep Sleep State of Sushupti,
He with three there remains;
—Chitta (Will), Prana (Vital Breath) and Sentience of Self,
Thus into the Heart-Centre Jiva enters
There one with the Subtle Object he stands
(In the state of Sushupti Deep).
Tamil Meaning:
சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.
Special Remark:
அதுவே கேவல துரியமாம். சுழுத்தியை, `சுழுனை` என்றார். காட்சிக்குக் கருவியாவனவற்றை, `காட்சி` என்றது ஆகு பெயர். `பிராணன் தன்காட்சியாக` என ஆக்கம் விரித்து, அத்தொடரை ஈற்றடியில் முதலில் கூட்டுக. ஒழுகுதல் - ஒழுகிப்போதல்; நீங்குதல். `சித்தம் ஒழுக` - என இயைக்க. `கமலம்` என்பது இடத்திற்கு ஏற்ப உந்திக் கமலத்தைக் குறித்தது விழுதல் - வந்து ஒடுங்குதல்.
இதனால், புருடன், பிராணன்` என்னும் இரு கருவிகளே செயற்பட, ஆன்மா உந்தியில் நிற்றல் கேவல துரியம், அல்லது கீழாலவத்தைத் துரியம் - என்பது கூறப்பட்டது.