ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
    திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
    விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
    எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
  • 10. பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
    ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
    துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
    அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. 
  • 11. நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
    காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
    நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
    நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
  • 12. முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
    செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
    செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
    ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 
  • 13. மதுவூர் குழலியும் மாடும் மனையும்
    இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
    பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
    மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. 
  • 14. வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
    அச்சக லாதென நாடும் அரும்பொருள்
    பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
    எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.
  • 15. ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
    ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
    வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
    நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 
  • 16. வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
    குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
    குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
    உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 
  • 17. ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
    சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
    பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
    வெந்து கிடந்தது மேலறி யோமே. 
  • 18. அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
    கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
    அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
    கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 
  • 19. மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
    காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
    ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
    வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 
  • 2. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
    உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
    கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
    மண்டி அவருடன் வழிநட வாதே. 
  • 20. கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
    ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
    பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
    தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
  • 21. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
    இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
    பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
    கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
  • 22. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
    முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
    விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
    படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 
  • 23. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
    உடலும் உயிரும் உருவம் தொழாமல்
    இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
    குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 
  • 24. குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
    டிடையுமக் காலம் இருந்து நடுவே
    புடையு மனிதரார் போகும்அப் போதே
    அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 
  • 25. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
    பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
    தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
    கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 
  • 3. ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 
  • 4. காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
    பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
    மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
    போலுயிர் மீளப் புகஅறி யாதே. 
  • 5. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
    ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
    மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
    காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 
  • 6. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 
  • 7. மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
    மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
    மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
    சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
  • 8. வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
    நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
    ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
    பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
  • 9. கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
    நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
    மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
    மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.