
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.
English Meaning:
We do not learn from the death of othersWitnessing the corpse from which the spirit has departed,
Humans think it will not happen to them,
They pursue the tinsels of the world,
And degenerate without any Karma getting extinguished.
Tamil Meaning:
இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.Special Remark:
`ஆதலின் அவனையே நாடுக` என்பது குறிப் பெச்சம். `பிச்சு, எய்ச்சு` என்பன, `பித்து, எய்த்து` என்பவற்றின் சிதைவு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage