ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

English Meaning:
Alive They Embraced the Body, Dead They Consigned it to Flames
Lips met lips, bodies locked in close embrace,
And love in surfeit cloyed—then died memories long cherished,
Soon the body on bier was set while mourners mourned;
All passion spent, the body in the leaping flames perished.
Tamil Meaning:
குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.
Special Remark:
`இறவாதிருந்தால் தான் பெறுவது என்னை?` என்றற்கு முன்னிரண்டு அடிகளைக் கூறினார். வாசந்தி - குருக்கத்தி, இது களவிற்குரிய இடமாக இலக்கியங்களில் குறிக்கப்படும். `முதற் கண் மிக்க காதலுடையராய் இருந்தார்` என்பது உணர்த்தற்கு இக்களவு முறையை எடுத்தோதினார். `மணம் புணர்ந்தப் பதி` என்பது பாடம் அன்று. ஆசந்தி- பாடை. ``பாசம்`` என்றது, ``பாசம் பரஞ் சோதிக்கு`` (தி.8 திருவெம்பாவை -2) என்பதிற்போல், `அன்பு` எனப் பொருள் தந்து. `அன்பு`, `நார்` எனப் படுதலும் உணர்க. `பாசமும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அன்பை அறவே விட்டொழிதலை. அச் சுடுதலோடு ஒன்றாக ஒதினார்.