ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 

English Meaning:
Nothing Remains, When Life Departs
The pulse failed, the mind lost its axle-hold,
The senses five, that buttered sweets enjoyed, left their home;
The fair-eyed beloved and dear treasures remained to stay,
But the spark of life for ever quitted.
Tamil Meaning:
உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உட லாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனை வியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடைபெறுவதுதான் கண்டது.
Special Remark:
`கண்டது` என்பது சொல்லெச்சம். ``கை விட்டு`` என்பதை `கைவிட` எனத் திரிக்க. உடம்பைத் தாங்கி நடத்துதலின், உயிரை ``அச்சு`` என்றார். இஃது ஏகதேச உருவகம்.
``நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்`` -திருவெண்பா. 1
என்று அருளினார் ஐயடிகளும், `நெய்யட்டி உண்டும், மையிட்ட கண்ணாளோடு இன்புற்றும், செல்வத்தால் சிறப்பெய்தியும் நிற்பனவெல்லாம் உடம்பு உள்ள துணையுமே; ஆனால், அவ்வுடம்பு நிலைத்தல் இல்லையே` என்றபடி